அதிகரிக்கும் கொரோனா தொற்று : இராணுவத் தளபதியின் மற்றுமொரு அவசர அறிவுறுத்தல்!!

1491

அதிகரிக்கும் கொரோனா..

இலங்கையில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் திருமண நிகழ்வு உள்ளிட்ட அறிவுறுத்தல்களை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மற்மொரு அவசர அறிவுறுத்தலானது வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நிறுவனங்களின் கடமைகளுக்குத் தேவையானவர்களை மட்டுமே பணிக்கு அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்களை விருப்பப்படி நிறுவனங்களுக்கு அழைத்தால் கோவிட் தொற்று அபாயம் அதிகரிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நேரத்தில் தேவையான ஊழியர்களை மட்டுமே அழைப்பது நிறுவனங்களின் தலைவர்களின் பொறுப்பு எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.