வெல்லவாய – ஹந்தபானகல பகுதி வீடொன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 22 வயதுடைய ஹன்சி பிரியதர்ஷினி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
சடலம் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்கென மொனராகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தம்புள்ளை – வேவலவெவ பிரதேசத்தில் இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
57 வயதுடைய மாலினி என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.




