பேஸ்புக்கால் இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

1580

பேஸ்புக்கால்..

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவரின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவரிடம் கப்பமாக பணம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக் ஊடாக பெற்றுக் கொண்டு அந்த புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக மாற்றி கப்பம் பெறுவதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்த இரண்டு கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் இரண்டை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். அவர்கள் பொலநறுவை மற்றும் அங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 20 – 23 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.