இராணுவ தளபதி..
இலங்கையில் 30 அகவைக்கும் மேற்பட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இப்போது முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா வெளியிட்டுள்ளார். இன்றைய நிலவரப்படி 30 அகவைக்கு மேற்பட்டவர்களில் 60 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செகுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், தடுப்பூசி பெறாத அனைவரும் அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார்.