நாட்டில் மீண்டும் பதிவாகிய 200க்கும் மேற்பட்ட அதிக்கூடிய கொரோனா மரணங்கள்!!

776

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,583 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 103 பெண்களும் 109 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் இலங்கை வரலாற்றில் அதிகபட்சமாக 214 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.