கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!

1079

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம்(28) கோவிட் தொற்றினால் 192 பேர் மரணமடைந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 8,775ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 83 பெண்களும் 109 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.