விபத்து..
கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நேற்றிரவு விபத்திற்கு இலக்காகியுள்ளது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ஹட்டன், குடாகம பகுதியில் வைத்து குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக தெரியவருகிறது.
சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லொறியில் சாரதி மட்டுமே பயணித்துள்ள நிலையில், அவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.