வவுனியாவில் 2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைப்பு!!

1415

2000 ரூபாய் கொடுப்பனவு..

வவுனியா பிரதேச செயலக பிரிவுகுட்பட்ட பகுதிகளில் வறுமைக் கேட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணமாக 2000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது.

ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக வவுனியாவில் 17 ஆயிரத்து 270 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் குடும்பங்களிற்கு அந்த நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக வவுனியா, உக்குளாங்குளம், பண்டாரிக்குளம் மற்றும் ரகுபாக்கம் ஆகிய கிராமங்ளை உள்ளடக்கிய பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட 350 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் கொடுப்பனவு அப்பகுதி கிராம அலுவலரினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், வைரவபுளியங்குளம், இறம்பைக்குளம், வவுனியா நகரம் உள்ளிட்ட பல்வேறு கிராம அலுவலர் பிரிவுகளிலும் குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.