இலங்கையில் நேற்றும் 200 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள்!!

627

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம்(29.08) கோவிட் தொற்றினால் 216 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 101 பெண்களும் 115 ஆண்களும் உள்ளடங்குவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்று முன்தினம் (28.08) கோவிட் தொற்றினால் 192 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.