புதிய வைரஸ் திரிபு ஆபத்தால் எச்சரிக்கை நிலையில் இலங்கை !!

997

புதிய வைரஸ் திரிபு..

தென்னாபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கோவிட் திரிபு குறித்து இலங்கை சுகாதாரத்துறை எச்சரிக்கை நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பரவும் வைரஸால் இலங்கையின் சுகாதார துறை நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், இன்னுமொரு வைரஸ் பரவுமாக இருந்தால் பெரும் பாதிப்பு நிலைக்கு தளப்பட்டுவிடும் என்று விசேட மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் இதுவரையில் இந்த வைரஸ் இலங்கையில் கண்டறியப்படவில்லை. ஆனாலும் இந்த வைரஸ் வேகமாக பரவுவதால் டெல்டா போன்று இலங்கைக்குள்ளும் நுழைந்து விடலாம் என்று விசேட நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.