இலங்கையில் நடந்த அதிசயம்!!

1667

பின்னவலை..

பின்னவலை யானைகள் சரணாலயத்தில் யானை ஒன்று இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. சுரங்கி என்ற பெண் யானைக்கு இரண்டு ஆண் யானைக் குட்டிகள் பிறந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் குட்டி இன்று அதிகாலை 04 மணிக்கும் இரண்டாவது குட்டி காலை 10 மணிக்கு பிறந்ததாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக யானை ஒன்று இரட்டை குட்டிகளை பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.