கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!!

1092

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் (30.08.2021) கோவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, நேற்று உயிரிழந்தவர்களில் 94 பெண்களும் 100 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் (29.08) கோவிட் தொற்றினால் 216 பேர் மரணமடைந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.