இலங்கையில் 109 வயதுடைய மூதாட்டியொருவர் மரணம்!!

2223

செம்பக்குட்டி செல்லம்மா..

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வந்த செம்பக்குட்டி செல்லம்மா (109 வயது) எனும் மூதாட்டியொருவர் இன்று இயற்கை எய்தியுள்ளார்.

1912 ஆம் ஆண்டு பிறந்த செல்லம்மா தனது 109 வயது வரை ஆரோக்கியமாகவே வசித்து வந்துள்ளார். இப்பிரதேசத்தில் அதிகூடிய வயதுடன் வாழ்ந்து வந்த செல்லம்மா ஆச்சிக்கு 12 பிள்ளைகள், 62 பேரப்பிள்ளைகள்,

147 பூட்டப்பிள்ளைகள், 27 கொள்ளுப்பிள்ளைகள் உள்ளனர். இவர் மூன்று நேரமும் தவறாது , தேவார, திருவாசகங்களை ஓதுவது என தமது பொழுதைக்போக்கியுள்ளார்.