வவுனியாவில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நான்கு பேர் நேற்று கொரோனா தொற்றால் மரணம்!!

2037


கொரோனா..



வவுனியாவில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத நான்கு பேர் கொரோனா தொற்று காரணமாக நேற்று (04.09.2021) மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கொரோனா தடுப்பூசி எதனையும் பெற்றுக் கொள்ளாத 32 வயது இளைஞன் உட்பட நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.




32 வயது இளைஞன் தவிர்ந்த ஏனைய மூவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர். குறித்த நான்கு பேரது சடலங்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.