மனைவி உயிரிழந்து 3 நாளில் கணவனும் உயிரிழப்பு : யாழில் நடந்த துயர சம்பவம்!!

1266

யாழில்..

யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றால் மனைவி உயிரிழந்து 3 நாட்களில் கணவனும் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தார். அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் அவரது கணவர் தனது 96 வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். அவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத் துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்.