தொட்டில் புடவையில் கழுத்து இறுகி பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!

1373

கேகாலை..

கேகாலை – தெரணியாகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் கு.ழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொ.ட்டில் பு.டவையில் க.ழுத்து இ.றுகி, சி.றுமியொருவர் உ.யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (07) மாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 11 வயதான டில்மினி என்ற சி.றுமியே இவ்வாறு உ.யிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தொ.ட்டில் பு.டவையில் சி.க்குண்டு, இந்த சி.றுமி உ.யிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட வி.சாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சி.றுமி நாளாந்தம், தமது சகோதரர்களுடன், ஊஞ்சல் கட்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, குறித்த சி.றுமி நேற்றைய தினம், அறையின் கதவுகளை அடைத்து, தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்ததாக அவரது தாயார் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சி.றுமி, மிக நீண்ட நேரம் வெளியில் வராததை அடுத்து, சி.றுமியின் சகோதரர்கள் கதவை நீண்ட நேரம் த.ட்டியுள்ளனர். சி.றுமியிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்காததை அடுத்து, சகோதரர்கள் தாயிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, தாய், வீட்டின் யன்னல் ஊடாக பார்த்த போது, சி.றுமி தொ.ட்டில் பு.டவையில் தொ.ங்கிக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளார். அதன்பின்னர், சி.றுமியின் சகோதரனை யன்னல் வழியாக அறைக்குள் அனுப்பி,

கதவை திறந்து சி.றுமியை தெரணியாகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் சந்தர்ப்பத்திலும், சி.றுமி உ.யிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சி.றுமியின் ச.டலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெரணியாகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக வி.சாரணைகளை தெரணியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.