டெல்டா வைரஸை கட்டுப்படுத்த திணறும் இலங்கை அரசு : உண்மையை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர்!!

1223

டெல்டா..

இலங்கையின் மருத்துவதுறை கோவிட் வைரசினை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்று வழங்கிய 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மிகவேகமாக பரவும் டெல்டா வைரசினை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கையின் சுகாதார முறை திணறுகின்றது.

மருத்துவமனைகள் கோவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் இந்த தருணத்தில் இவ்வாறான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டமை உரிய தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இந்த நடவடிக்கை மருத்துவமனைகள் உயிர்களை காப்பாற்றுவதற்கு பெரிதும் உதவியாக காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-