ஐந்து நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட விறகு வெட்ட காட்டிற்கு சென்ற 25 வயது யுவதி!!

1757


நுவரெலியா..



நுவரெலியா, பூண்டுலோயா – டன்சினன் பகுதியில் காணாமல்போன 25 வயதான இளம் யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி கடந்த ஐந்தாம் திகதி விறகு வெட்ட சென்ற நிலையிலேயே காணாமல்போயுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருந்தது.



இந்த நிலையில் காணாமல்போன தனது மகள் பல நோய்களுக்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், முன்னர் சில சந்தர்ப்பங்களில் அவர் காணாமல் போனதாகவும் நுவரெலியா பொலிஸாரிடம் தாய் தெரிவித்திருந்தார்.




இதனை தொடர்ந்து குறித்த யுவதியை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று கிகிளியாவ பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.