கொரோனா..
இலங்கையில் கோவிட் மரண எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. அக்டோபர் 01 ஆம் திகதி 55 கோவிட் இறப்புக்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,
இலங்கையில் மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று இதுவரையான காலப்பகுதியில் 599 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டின் மொத்த கோவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை 519, 374ஆக உயர்ந்துள்ளது.