பிச்சை எடுத்து சேமித்த பணத்தை மறைத்து வைத்த இடத்தை மறந்த பார்வையற்றவர் : 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சி!!

1962

இந்தியாவில்..

இந்தியாவில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் பார்வையற்ற பிச்சைக்காரர் அதை மாற்றி தருமாறு உருக்கமான கோரிக்கையை வைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னகண்ணு (65). இவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவின் விவரம், சின்னகவுண்டனூா் கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் நான் வசித்து வருகிறேன்.

எனக்கு 5 வயதிலேயே பாா்வை போய்விட்டது. பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன். அவ்வாறு பிச்சை எடுத்த பணம் ரூ. 65,000ஐ மறைத்து தனியாக வைத்திருந்தேன். எனக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அதனால் நான் பிச்சை எடுத்து சேமித்த அந்தப் பணத்தை எங்கு வைத்தேன் என்பதை மறந்துவிட்டேன். கடந்த சில நாள்களுக்கு முன்னா் நான் வைத்திருந்த பணத்தைக் கண்டெடுத்தேன்.

அந்தப் பணத்தை எனக்குத் தெரிந்தவா்களிடம் காண்பித்தபோது அந்த ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாதவை என்று தெரிவித்தனா். இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நான் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட விவரம் எனக்குத் தெரியவில்லை.

ஏற்கெனவே ஆதரவு இன்றி வாழ்ந்து வரும் எனக்கு நான் சேமித்து வைத்த பணம் உதவும் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது செய்வதறியாமல் உள்ளேன். என்னிடம் இப்போது ரூ 300 மட்டுமே உள்ளது.

நான் வறுமையில் வாழ்வதால் என் வசம் உள்ள செல்லாத ரூ. 65,000 தாள்களை (ரூ. 5,00, ரூ. 10,00) தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றி வழங்க உதவி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.