10ம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

2249

திருவாரூர்…

திருமணமான 35 வயது அங்கன்வாடி பெண் ஊழியருடன் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் தலைமறைவான சம்பவம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் சிக்னலை வைத்து இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் 6 நாட்களுக்கு பின்னர் சிக்கியுள்ளனர். மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு அப்பெண்ணை போக்சோவில் சிறையில் தள்ளியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் தாலுக்காவில் தேதியூர் தெற்கு தெருவில் வசித்து வருபவர்கள் பாலகுரு – ராசாத்தி தம்பதிக்கு 15 வயதில் பரத் என்கிற மகனும் 13 வயதில் சாரதி என்ற மகளும் பாரதி என்ற மகளும் உள்ளனர்.

அதே தெருவில் கட்டிட வேலை செய்து செய்கின்ற பாலகிருஷ்ணன் லலிதா தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார்.

லலிதா தேதியூரிலிருக்கும் அங்கன்வாடியில் சமையல் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அருகில் உள்ள எரவாஞ்சேரி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார் பரத். உனக்கு 35 எனக்கு 15 என்ற கணக்கில் பரத்தும் லலிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறியிருக்கிறது.

இத்தனை சின்ன வயதில் அத்தனை பெரிய பெண்ணுடன் என்ன பழக்கம் என்று பரத்தின் பெற்றோர் கண்டிக்கிறார்கள். ஒரே பகுதியில் இருந்தால் பழக்கம் தொடரும் என்று எரவாஞ்சேரி அக்ரஹாரா பகுதியில் இருக்கும் சித்தி வீட்டில் தங்க வைத்து பரத்தை படிக்க வைத்துள்ளனர்.

சித்தி வீட்டில் இருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். ஆனாலும் லலிதாவுடன் அவர் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த சூழலில் கடந்த இருபத்தி 26ஆம் தேதி அன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அப்போதுதான் லலிதாவும் காணவில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் பரத் காணவில்லை என்று அவரது தந்தை பாலகுரு புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் கிருத்துவ மேரி என்பவர் பரத் – லலிதா இருவரையும் பரத் படித்துவந்த பள்ளிக்கு அருகில் ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பியதாக தெரிய வந்தது.

இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தபோது அந்த ஆட்டோ டிரைவர் தனபால் பதிலளித்தபோது, இருவரையும் பூந்தோட்டம் ஊரில் இறக்கி விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆட்டோ டிரைவர் தனபால் இடம் பெற்ற தகவலின் பேரில் போலீசார் இருபத்தி ஏழாம் தேதியன்று லலிதா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

பூந்தோட்டம் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாததால் லலிதாவின் செல்போன் சிக்னல் என்னை வைத்து அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை அறிய போலீஸார் முற்பட்டனர்.

அதன்படி வேளாங்கண்ணியில் சிக்னல் காட்டியதால் அங்கு சென்று தொடர் தேடுதலில் அவர்களை பிடித்துவிட்டனர். 6 நாட்களுக்கு பின்னர் இருவரையும் பிடித்துவிட்டு போலீசார், மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு, லலிதாவை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.