தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் உறவினர்கள்!!

1078

விழுப்புரம்..

விழுப்புரம் மாவட்டம் சித்திலிங்கமடத்தில் தாத்தா இறுதி ஊர்வலத்தில் சென்று கொண்டு இருந்த பேத்தி, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த தாத்தா வெள்ளிக்கண்ணுவை அடக்கம் செய்ய உறவினர்களுடன் சென்ற 5 ஆம் வகுப்பு சிறுமி திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், 3 மணி நேரம் தேடி சிறுமியின் உடலை கண்டெடுத்தனர். 12 அடி ஆழ ஆற்றில் மண்ணில் சி.க்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.