கோர விபத்தில் பறிபோன உயிர் : சோகம் தாளாமல் கதறும் குடும்பத்தினர்!!

1266

தூத்துக்குடி..

மிதிவண்டி-அரசு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின்புதூர் பிள்ளையார் கோவில் தெருவில் விவசாயியான மாரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவர் தனது நிலத்திற்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அவர் சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று அவரின் மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாரிசாமி தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநரான ராஜுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.