வவுனியாவில் சுகாதார நடைமுறைகளுடன் தரம் 10, 11, உயர்தரப் பிரிவுக்களுக்கான பாடசாலைகள் ஆரம்பம்!!

1163

பாடசாலைகள் ஆரம்பம்..

வவுனியா மாவட்டத்தில் 10 ஆம் ஆண்டு தொடக்கம் 13ஆம் ஆண்டு வரையிலான அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளும் இன்று (08.11) ஆரம்பிக்கப்பட்டது.

கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய 6 மாதங்களின் பின்னர் கல்வி நடவடிக்கை ஆரம்பமான நிலையில் வவுனியா மாவட்டத்திலுள்ள விபுலானந்தாக் கல்லூரியும் சுகாதார நடைமுறைகளுடன் தரம் 10 தொடக்கம் உயர்தரம் வரைலயிலான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமானது.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்களின் வரவு அதிகரித்து காணப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு மழைகாரணமாக சற்று குறைவடைந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.