14 வயது சிறுமியை காதலித்த 17 வயதுச் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

1380

தமிழகம்..

வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்கின் மகன் கோகுல்(17). இவர் ஆட்டோ மெக்கானிக் வேலை செய்து வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

கடந்த 22ஆம் தேதி சிறுமி.யை கூட்டிக் கொண்டு கோகுல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் சென்னையில் சிறுமி இருப்பதை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதையடுத்து சாய்நாதபுரத்தில் வைத்து சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த கோகுல் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கோகுல் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தை ராஜகுரு உட்பட 5 பேர் கைது செ.ய்யப்பட்டனர். இந்நிலையில்,

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கை முறையாக விசாரிக்காத பாகாயம் போலீஸ் எஸ்.ஐ ரவி அரியலூர் காவல் நிலையத்திற்கும், எஸ்.ஐ பிரபாகரன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.