
முதியவர் ஒருவர் யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவின் ஆங்கினார் கிராமத்த்தை சேர்ந்தவர் 75 வயதான பூல் பாண்டியன்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உண்டு. மும்பையில் பணியாற்றிய இவர், குழந்தைகளுக்கு திருமணம் செய்து தனது இல்லற கடமைகளை முடித்த பின்னர், அவரது மனைவி இறந்து விட்டார்.

மனைவி இறந்த பின்னர் வீட்டை விட்டு வெளியேறி யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்த தொடங்கிய இவர், யாசகம் மூலம் கிடைத்த பணத்தை வைத்து சுமார் 40 அரசு பள்ளிகளுக்கு நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள் குடிநீர் இயந்திரங்கள் போன்றவற்றை வழங்கியுள்ளார்.
கொரோனா காலத்தில் மதுரையில் இருந்த இவர், யாசகம் பெற்று ஒவ்வொரு மாதமும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10,000 மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இவ்வாறாக 10 மாதங்களில் ரூ.1 லட்சம் வழங்கினார்.
அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், சுதந்திர தினவிழாவில் அவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். யாசகர் ஒருவர், இதுபோன்ற அரசு விழாவில் கவுரவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நிவராண நிதி வழங்கியுள்ளார்.
கொரோனா நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி என தமிழக அரசுக்கு இதுவரை சுமார் ரூ.1.60 கோடி வழங்கியுள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது ரூ10,000 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.




