வவுனியாவில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

849


தடுப்பூசி..



வவுனியாவில் சுகாதாரத் துறையினருக்கு மூன்றாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்னிலை பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



அதற்கமைவாக, வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.




இதன்போது, வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.