மனைவியின் ஒற்றை சொல்லால் ஆத்திரமடைந்த கணவன் செய்த வெறிச்செயல்!!

1193

மதுரை..

மதுரையில் குடும்ப தகரா.று காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள பாரதியார் 5வது தெருவில் வசித்து வரும் சிவகுமார் – மேரிக்குட்டி தம்பதியருக்கு திருமணமாகி 35 வருடங்கள் ஆகிறது.

இதில் கணவர் சிவகுமார் ஓய்வுபெற்ற ரயில்வே சிக்னல் ஆபரேட்டராக உள்ளார். திருமணமாகி 35 வருடங்கள் ஆன நிலையிலும் இருவருக்கும் குழந்தைகள் இன்றி தனியே வசித்து வந்துள்ளனர்.

தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவகுமார் மேரி குட்டி கழுத்தை அறுத்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மேரி குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உ.யிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்து போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.