இலங்கையில் அடுத்த வாரத்தில் ஏற்படப் போகும் ஆபத்து!!

2265

கொவிட்..

மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாவிட்டால் இன்னும் 10 நாட்களில் கொவிட் தொற்றாளர்கள் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோவிட் நோய் பரவல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது புதிய அலையின் ஆரம்பம் என கூற முடியாது. ஆனால் அப்படி ஒரு நிலைமை ஏற்படாதென எங்களால் கூற முடியாது. அதற்கு காரணம் தற்போதைய கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பாகும்.

கடந்த நாட்களாக காணப்பட்ட மக்களின் செயற்பாடுகளின் முடிவாகவே இந்த அளவிற்கு கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு அல்லது 10 முதல் 15 நாட்களுக்குப் பிறகு எங்கள் நடத்தை முறையின் விளைவாக அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

தற்போதைய நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் எதிர்வரும் நாட்களில் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். எனினும் இன்று நாங்கள் சிந்தித்து செயற்பட்டால் எதிர்வரும் 10 முதல் 15 நாட்களுக்கு அதிகரிக்கும் தொற்றாளர்களை எங்களால் தடுக்க முடியும்.

அதற்காக சுகாதார நடைமுறைகளை நாங்கள் உரிய முறையில் பிற்பற்றி செயற்பட வேண்டும். உரிய முறையில் முகக் கவசம் அணிதல் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் உரிய முறைய பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.