கார் விபத்தில் உயிரிழந்த மொடல் அழகிகளுக்கு வந்த கொலை மிரட்டல் : அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!!

961

கார் விபத்தில்..

இந்தியாவில் மிஸ் கேரள அழகிகள் உயிரிழந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர்.

இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம் வென்றுள்ளார். இவருடன் இதே அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் அஞ்சனா சாஜன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இந்த அழகிப் போட்டிகள் மூலம் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினார். அந்த வகையில் ஆன்சி, அஞ்சனா உட்பட 4 பேர் திருச்சூரை சேர்ந்த நண்பர்களுடன் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை குறித்து எர்ணாகுளம் பொலிசார் தீவிர விசாரணை நடத்திய போது சிசிடிவி பதிவுகளை அழித்த குற்றத்திற்காக ராய் வயலாட் எனும் ஓட்டலின் உரிமையாளர் உட்பட 5 பேரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆன்சி மற்றும் அஞ்சனாவிற்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாடல் அழகிகளின் காரை பின் தொடர்ந்த ஆடி கார் மர்ம நபரை போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர்.

அவரின் பெயர் சைஜு தங்கச்சன் என தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், விருந்தில் பங்கேற்ற இவர் அந்த இளம் பெண்கள் இருவருக்கும் போதைப்பொருட்களை கொடுத்துள்ளார்.

அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டு இரண்டு அழகிகளும் காரில் சென்று விட்டனர். இதனால் கடுப்பான தங்கச்சன் அவர்களை காரில் பின் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து தவறான நோக்கில் பெண்களை பின் தொடர்தல் மற்றும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சைஜு தங்கச்சனை கைது செய்தனர்.