வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதமகுரு கந்தசாமி குருக்கள் காலமானார்!!

3463

கந்தசாமி குருக்கள்..

வவுனியா சிரேஷ்ட இந்த மதகுருவான குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதமகுரு, கந்தசாமி குருக்கள் இன்று (01.12.2021) காலமானார். கடந்த வாரம் (24.11) கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்,

அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகளை பெற்று வந்தார். 73 வயதான கந்தசாமி குருக்கள் கொவிட் 19 க்கான தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் ஆபத்தான நிலையில் ஒருவார காலமாக சிகிச்சைகளை பெற்று வந்த கந்தசாமி குருக்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.