வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

1102

கொரோனா..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து,

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த உத்தியோகத்தருடன் நெருங்கி பழகிய உத்தியோகத்தருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில்,

மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவரும் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.