வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்று காணாமல் போன மூவரும் உயிரிழப்பு!!

5407

முல்லைத்தீவு கடலில்..

வவுனியாவில் இருந்து சென்ற இளைஞர்கள் மூவர் முல்லைத்தீவு கடலில் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினமே ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் இரண்டாவது நபரின் சடலம் இன்று காலை தீர்த்தக்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மூன்றாவது நபரின் உடலம் அளம்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வானில் வந்த மூன்று இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.

குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

தேடுதலின் போது ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.