வவுனியா நகரில் 5 வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு திருட்டு : இரு சந்தேகநபர்கள் கைது!!

2918

திருட்டு..

வவுனியா நகரிலுள்ள 5 வர்த்தக நிலையங்கள் நள்ளிரவில் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரின் கந்தசாமி கோவில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, மில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 5 வர்த்தக நிலையங்கள் நேற்று இரவு 9.30 மணிக்கு பின்னரான பகுதியில் உரிமையாளரினால் மூடப்பட்டு சென்ற நிலையில் இன்று (07.12.2021) காலை வர்த்தக நடவடிக்கைக்காக திறக்கப்பட்ட சமயத்தில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு களவாடப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் குறித்த வர்த்தக நிலையங்களில் காணப்பட்ட பணத்தினையே திருடிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் சி.சி.ரி.வி காணோளி உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.