இலங்கை அணி வெற்றியால் ஆடையைக் களைந்தவருக்கு நீதிமன்றம் 2500 ரூபா அபராதம்!!

581

SL fan

மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்- இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப்போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்த போட்டியை கொள்ளுப்பிட்டியிலுள்ள லிபர்ட்டி பிளாஸா கட்டடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாரியளவான திரையில் பலரும் கண்டுகளித்துகொண்டிருந்துள்ளனர்.

அங்கு போதையிலிருந்த இளைஞன் ஒருவர், இலங்கை அணி வெற்றிப்பெற்றதையடுத்து ஆடைகளை களைந்து உடலில் ஒரு துண்டு துணியில்லாமல் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்போதே அவரை 2500 ரூபா பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நீதவான் விடுதலை செய்தார்.

அன்றைய போட்டியை மழை குறுக்கிட்டமையினால் டக்வத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்தாகும்.