போராட்டம்..

வவுனியா ஓமந்தை , பொற்கோவிலுக்குச் செல்லும் பிரதான வீதியைச் சீரமைத்துத்தருமாறு கோரிக்கையை முன்வைத்து அங்குள்ள மக்கள் வாகனங்களை வழிமறித்து போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா ஓமந்தை பொற்கோவில் செல்லும் வீதி அங்குள்ள கிரசர் ஒன்றின் பயன்பாட்டினால் மிகவும் பாதிப்படைந்து மக்கள் பயன்பாட்டிற்குதவாக வகையில் காணப்படுகின்றனது.

இவ்வீதியைச் சீரமைத்துத்தருமாறு பல தடவைகள் கோரியும் அது சீரமைக்கப்படவில்லை . எனவே எமது பாவனையிலுள்ள வீதி அங்குள்ள கிரசர் ஒன்றிலிருந்து அகழப்பட்டு வரும் கற்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களினால் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆலயத்திற்குச் செல்லவும் பாடசாலைகளுக்குச் செல்லவும் நோயாளர்களை அழைத்துச் செல்லவும் பல்வேறு அசௌகரியங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
எமது வீதி சீரமைப்பதற்குரிய உத்தரவாதம் அளிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்து அங்கிருந்து கற்கள் அகழ்வு மேற்கொண்டு வரும் வாகனங்களை வழிமறித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.




