வவுனியாவில் நாளை பல இடங்களில் மின்தடை : விபரம் உள்ளே!!

3016

மின்தடை..

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (14.12.2021) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

வவுனியா பிரதேசத்தில் வைரவபுளியங்குளம், ஆதி விநாயகர் கோவிலடி, நெடுங்குளம். சூரிய மின் உற்பத்தி நிலையம், மரக்காரம்பளை – கணேசபுரம், ஜீவன் அரிசி ஆலை, சுஜன் அரிசி ஆலை- காத்தான் கோட்டம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.