பட்டினியால் ஐந்து வயது சிறுவன் மரணம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சமபவம்!!

1421

ஐந்து வயது சிறுவன்..

தமிழகம் விழுப்புரத்தில் பட்டினியால் ஐந்து வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மேல் தெரு பகுதியில் தள்ளுவண்டியில் கிடத்தப்பட்ட நிலையில் இந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.

சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தநிலையிலேயே மரணத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, சிறுவன் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. எனினும் கடந்த இரண்டு நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இன்றியே அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

,இதேவேளை ஞாயிற்றுக்கிழமை ரோயல் ஹோபார்ட் மருத்துவமனையில் மற்றொரு சிறுவன் உயிரிழந்தமையை பொலிசார் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவின் வடக்கில் இடம்பெற்ற விபத்தில் இறந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

11 வயதான சேஸ் ஹரிசன் என்ற மாணவரே விபத்தின் பின்னர் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் இன்று மரணமானார் அண்மையில், Devonport’s Hillcrest ஆரம்ப பாடசாலையின் ஆண்டு நிறைவு விழாவின் போது,

10 மீட்டர் உயரத்தில் இருந்து விளையாடிக்கொண்டிருந்து வீழ்ந்தநிலையில் 5 மாணவர்கள் ஏற்கனவே மரணமாகினர் இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றும் ஒருவரே இன்று மரணமாகியுள்ளார்.