பள்ளி சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!!

1211

திண்டுக்கல்..

இந்தியாவில் 9 வயது பள்ளி சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலூர் கிராமத்தில் வசித்து வருபவர் சத்யராஜ்.

இவரின் மகள் பிரித்திகா(9). இவர் பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் திகதி அன்று இடைவேளையின் போது பள்ளியை விட்டு வெளியேறிய சிறுமி பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் 3 நாட்களாக பள்ளி வளாகத்தில் முகாமிட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனையில் இறந்து போன மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மண்ணெண்ணை ஊற்றி சிறுமியை கொல்ல முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியின் மரணத்துக்கு நரபலி கும்பல் காரணமாக இருக்கலாமா என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். 9 வயது சிறுமி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.