வவுனியா சிறைச்சாலை கைதிகளுக்கு கிறிஸ்மஸ் தின பரிசுப்பொதிகள் வழங்கி வைப்பு!!

850

வவுனியா சிறைச்சாலை..

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தினை முன்னிட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் ஆலோசனைக்கமைவாக கைதிகளுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறைச்சாலை கைதிகளின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கனடா ஜீவாதிபதி கிறிஸ்தவ தேவாலயம் நிதி அனுசரனையில் தண்டனைக் கைதிகளும் விளக்கமறியல் கைதிகளும் உட்பட 209 கைதிகளுக்கு சுமார் 1500 ரூபா பெறுமதியான (ஒர் பரிசுப்பொதியின் பெறுமதி) பரிசுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சிறைச்சாலை கைதிகளின் நலன்புரி உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் இணைந்து கைதிகளுக்கு இப் பரிசுப்பொதியினை வழங்கி வைத்திருந்தனர்.