வவுனியா தம்பனைக்குளத்தில் இளைஞரின் சடலம் மீட்பு : பொலிஸார் விசாரணை!!

2019

இளைஞரின் சடலம் மீட்பு..

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளத்தில் இன்று (26.12) மாலை இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

தம்பனைக்குளத்திற்கு அண்மித்த பாதையில் வழமை போன்று மக்கள் சென்ற சமயத்தில் குளத்தினுள் சடலம் காணப்பட்டதினையடுத்து,

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த செட்டிக்குளம் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் மதவாச்சி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஹரிந்து கோசல்யுஸ்வெத்யராச்சி என தெரியவந்துள்ளதுடன், கொலையா அல்லது நீரில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.