வவுனியா புளியங்குளத்தில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு குடைசாய்ந்து விபத்து!!

1829

விபத்து..

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் இன்று (27.12.2021) மதியம் 12.30 மணியளவில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டி வண்டி ஏ9 வீதியூடாக மாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் புளியங்குளம் பகுதியில் வீதியின் குறுக்காக மாடு குறுக்கிட்டதால் முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மாட்டுடன் மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவர் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தமையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.