வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற வவுனியம் நூல் வெளியீடு!!

1165

வவுனியம் நூல் வெளியீடு..

வவுனியாவில் வவுனியம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும்,

வவுனியா பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த நூல் வெளியீட்டு விழா வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28.12) இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார பேரவைத் தலைவருமான நா.கமலதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ‘வவுனியம்’ நூலினை வெளியிட்டு வைத்தார். அத்துடன் அதிதிகளுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் திருமதி மு.சபர்ஜா, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ச.பிரியதர்சினி, கலாபூசணம் இ.சிவசோதி, தமிழ்நிதி அருணா செல்லத்துரை, தமிழ் மணி அகளங்கன், தமிழரவி த.சிவகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.