குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று காலை 6 மணி தொடக்கம் நாட்டில் அனைத்து பொலிஸ் நிலைய பகுதிகளிலும் இத்திட்டம் செயற்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஏப்ரல் 20ம் திகதிவரை இத்திட்டம் 24 மணிநேரமும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.