இலங்கை மக்களை நெகிழ வைத்த ஜேர்மனிய தம்பதி!!

858


ஜேர்மனிய தம்பதி..



இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஜேர்மனிய தம்பதி மக்களை நெகிழ வைக்கும் செயல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த நாட்களாக பாரிய எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் பொது மக்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டனர்.



இந்நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஜேர்மனி தம்பதியினால் இரண்டு லொறி விறகுகள் மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.



கடந்த 13ஆம் திகதி காலி மாவட்டத்தின் ஒரு பகுதி மக்களுக்காக இந்த உதவியை ஜேர்மனி தம்பதியினர் மேற்கொண்டுள்ளனர்.


இலங்கை சுற்றுலா வழிக்காட்டி ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க ஜேர்மனியில் வசிக்கும் நோர்பர்ட் க்ளெப்பர் மற்றும் அனிதா மஜா கெய்ல் தம்பதியினரால் விறகு விநியோகிக்கப்பட்டுள்ளது.


நூற்றுகணக்கான குடும்பங்களுக்கு இலவங்கப்பட்டை விறகு கட்டுகள் விநியோகிக்கப்பட்டதாக அதனை பெற்றுக் கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நோர்பர்ட் கிளெப்பர், “சமீபத்தில் காலி மாவட்டத்தின் அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எரிவாயு லொறி ஒன்று வந்து எரிவாயு விற்பனை செய்தது.

எனினும் ஒருவருக்கும் உரிய முறையில் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது. இதை நாடு முழுவதும் உள்ள தொலைக்காட்சி செய்திகளில் காணலாம்.

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவியது. சமையல் செய்ய மக்களிடம் எரிபொருள் இல்லை. அதனை பார்க்க மிகவம் கவலையாக இருந்தது.


அதற்கமைய விறகுகளை இறக்குமதி செய்து விநியோகிக்க எண்ணியிருந்தோம். இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் உதவ நாங்கள் தயாராக உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.