கிளிநொச்சியில் வீதியால் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணைக் கடத்த முயற்சி!!

364

Kidnapகிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை அந்த வழியால் ஆட்டோவில் வந்த இருவர் கடத்த முயன்ற சம்பவமொன்று நேற்று மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது..

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் நேற்று மதியம் 12.00 மணியளவில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணை அந்த வழியால் ஆட்டோவில் வந்த இருவர் வழிமறித்து ஒருவரின் முகவரியை விசாரித்துள்ளார்கள்.

அம்முகவரி தனக்குத் தெரியாது எனக் கூறிவிட்டு செல்ல முற்பட்ட போது அப்பெண்ணை தமது ஆட்டோவில் வருமாறு வற்புறுத்தி, கெட்ட வார்த்தைகளால் ஏசிக்கொண்டு அப்பெண்ணை பலவந்தமாக அவர்கள் வந்த ஆட்டோவில் ஏற்ற முற்பட்டுள்ளனர்.

அப்போது திகைப்படைந்த அந்த இளம் பெண் கூக்குரலிட்டு கத்தியுள்ளார். கத்தும் சத்தம் கேட்டு அயலவர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றதனை அவதானித்த கடத்தல்காரர்கள் இருவரும், தாம் வந்த ஆட்டோவில் ஏறி வேகமாகத் தப்பித்துச் சென்றுவிட்டார்கள்.

இதனால் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அச்சமும் பதட்டமும் நிலவியது.

கிளிநொச்சியில் வீதிக்கு வீதி இராணுவம் காணப்படுகின்ற போதிலும் களவுகளும், கடத்தல் முயற்சிகளும் இடம்பெறுகின்றமை மக்கள் மத்தியில் குழப்பத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.