33 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுவன் உயிரிழப்பு!!

996

ஆப்கானிஸ்தானில்..

ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஹைதர் என்ற சிறுவன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுவனை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வந்தனர். அத்துடன், சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் தண்ணீர் மற்றும் பிராணவாயு என்பன தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், மீட்பு பணியின் இறுதி நிமிடத்தில் சிறுவன் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மதியம் குறித்த சிறுவன் மீட்கப்பட்டதுடன், சிகிச்சைக்காக அவரை உலங்கு வானூர்தியில் அழைத்து செல்ல முற்பட்டபோது அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.