ஜனாதிபதி இல்லம் மக்களால் முற்றுகை : இராணுவ பேரூந்திற்கு தீ வைப்பு : தொடரும் பதற்ற நிலை!!

2380

ஜனாதிபதி இல்லம்..

ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையாக செயற்பட்டு இராணுவ பேருந்து மற்றும் மேலும் ஒரு வாகனத்திற்கு தீயிட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் இருந்தவாறு வன்முறையாக நடந்துக்கொண்டதாகவும் இதனையடுத்து இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையின் அந்த பிரதேசத்தின் பாதுகாப்பாக அழைக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் மத்தியில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரசியல் கட்சி சாராத மக்கள் இன்று மாலை ஒன்றுக் கூடி ஜனாதிபதி இல்லத்திற்கு எதிரில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது ஏற்பட்ட சம்பவங்களில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.