இன்று மின்தடை நேரத்தில் திடீர் குறைப்பு : ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்கள் மாத்திரமே தடை!!

1706

மின்தடை..

இன்று ஏப்ரல் 03ம் திகதி திட்டமிடப்பட்ட மின்சார தடை ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றய தினம் 6 மணி நேர மின்வெட்டு மேற்;கொள்ளப்படும் என ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளை இலங்கை மின்சார சபை பெற்றுக்கொள்ளத் தொடங்கியதால், திட்டமிடப்பட்ட மின்சாரத் தடையின் காலம் குறைக்கப்பட்டதாக ஆணைக்குழு விளக்கமளித்தது.

இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய குழுக்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளில் மாலை 5.30 க்கும் இரவு 10.30க்கும் இடையில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.