நாளை மீண்டும் அதிகரிக்கப்பட்ட மின்வெட்டு நேரம்!!

2066

மின்வெட்டு..

இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையின் 7 மணித்தியால மின்தடை கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

நாட்டில் நாளைய தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை நடைமுறைப்படுத்த மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், குறித்த இக்கோரிக்கையை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இதன்படி, நாளை 5 மணித்தியால மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், நாளை காலை முதல் மாலை வரையில் 3 – 4 மணித்தியாலங்களும், மாலை முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் 1 – 2 மணித்தியாலங்களும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.